Tuesday, February 5, 2008

ராம்போ 4 - ஒரு எச்சரிக்கை




சில்வஸ்டர் ஸ்டாலோன் இயக்கி நடித்திருக்கும் ராம்போ 4,ராம்போ படங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது குறைந்த பட்சம் ஸ்டாலோன் கையில் துப்பாக்கியுடனும், தலையில் ஒரு கட்டுடனும் இருக்கும் ஸ்டிக்கரையாவது பார்த்திருப்பீர்கள் ( நானும் அப்படிப்பட்ட ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்டியன் ) , ராம்போ ஒரு தனிமனித போராளி, எதையும் தனித்து நின்று சமாளிக்கும் திறன் உள்ளவன், ராம்போவின் முந்தைய படங்கள் மூன்றிலும் அவன் தனிமனிதனாக உலகத்தில் எங்காவது போராடி வெற்றிவாகை சூடுவான், முதலிரண்டு படங்களில் வியட்னாம் , அடுத்து ஆப்கானிஸ்தான்(!) இப்படி போர்ச் சூழலில் போராடும் தனி மனிதனான அவனுக்கு குடும்பமில்லை, சொந்த பந்தமில்லை, அவனது முழுக் கதையையும் அவனது போர்த் திறனையும் தெரிந்து கொள்ள நீங்கள் மூன்று படங்களையும் பார்க்க வேண்டும். நான்காவது கதையிலும் ராம்போவின் வீரதீர செயல்கள் அப்படியே வருகின்றன, அதே காட்டுச் சூழல் , தனிமனிதன் ராணுவத்தை எதிர்ப்பது என்று அப்படியே எல்லாம் மாறாமல் வருகின்றன, ஆனால் மற்ற படங்களைப் பார்த்துவிட்டு அதே எதிர்பார்ப்போடு நீங்கள் திரை அரங்கிற்குள் சென்றால் உங்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கும், மற்ற ராம்போ படங்களை விட ,ஏன் மற்ற எந்த படங்களையும்விட இந்த படத்தில் வன்முறை அதிகபட்சமாக உள்ளது, உடல்கள் சிதறுவது, தலை, கை கால் மற்ற உறுப்புக்கள் குண்டடிபட்டு சிதறுவது, பாலியல் வன்முறை மற்றும் வார்த்தைகளில் சொல்ல முடியாத கோரக் காட்சிகள் இடம் பெறுகின்றன, அதோடு கிராப்பிக்ஸ்-ன் உதவியால் இந்த வன்முறைக் காட்சிகள் இம்மி பிசகாமல் அப்படியே கண் முன் தெரிகிறது! , இப்படிப்பட்ட கோரக் காட்சிகளை படத்தின் முதற்பாதியில் வைத்தால் தான் , கடைசியில் ஸ்டாலோன் அந்த ராணுவத்தை துவம்சம் பண்ணும்போது பார்க்க திரில்லிங்காக இருக்கும் என்ற ‘லாஜிக்’ படம் எடுத்தவர்களுக்கு தோன்றியிருக்கக் கூடும் , அதற்காக சற்று அதிகமாக எல்லாவற்றையும் காட்டிவிட்டார்கள்!, அமேரிக்காவில் இதன் ரேட்டிங் -R-21 , இதன் நேரம் 1:33 , நான் பார்த்தது சிங்கப்பூரில், இங்கே இது -M-18 , இதன் நேரம் 1:15, அதாவது கிட்டத்தட்ட 15 நிமிட படம் வெட்டப்பட்டு வெளிவந்திருக்கிறது ,அப்படி வெட்டப்பட்டும் இளைஞனான என்னால் படத்தின் கோரக் காட்சிகளை கண் கொண்டு பார்க்க முடியவில்லை, இப்படிப்பட்ட கொடூரங்கள் நிகழத்தான் செய்கின்றன அதைத் தானே காட்டுகிறார்கள் , உனக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் பார்க்கிறாய்? என்று நீங்கள் கேட்கலாம், நான் சொல்லவந்தது, இப்படிப்பட்ட படங்கள் குழந்தைகளுக்காக அல்ல! , இந்தியா போன்ற நாடுகளில் A செர்ட்டிபிக்கட் கொடுக்கப் பட்டிருக்கும் படங்களை குழந்தைகள் பார்க்கக் கூடாது, ஆனால் பல அஞ்ஞானிகள் பெண்டு பிள்ளைகளோடு இப்படிப்பட்ட படங்களுக்கு வந்துவிடுகிறார்கள், ( இப்பொழுது வரும் பாதி தமிழ் படங்கள் A செர்டிபிக்கட்டோடு வருகின்றன, உதாரணத்திற்கு சூர்யா நடித்து சில வருடங்களுக்கு முன் வந்த ‘ஆறு’ திரைப்படம் A செர்டிபிக்கட் படம், ஆனால் அந்த படத்திற்கு ஒருவர் குழந்தைகளோடு வந்தார்!) இந்தியாவில் உள்ள திரையரங்க நிர்வாகங்களும் குழந்தைகளை அனுமதித்துவிடுகிறது அதன் தீமைகளை உணராமல்!, நமக்கும் சாதரணமாக தெரியும் சில காட்சிகள குழந்தைகளுக்கு வேறு வகையான பாதிப்புகளை உண்டாக்கும், அதனால் தமிழகத்தில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட படங்களுக்கு குழத்தைகளை கூட்டிக் சென்று தங்கள் பிள்ளைகளின் மனநலனை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்கள்!, தயவு செய்து உங்கள் குழந்தைகளை இப்படிப் பட்ட படங்களுக்கு கூட்டி செல்லாதீர்கள், நீங்கள் ஒரு A செர்டிபிக்கட் படத்தை பார்க்கும் போது யாராவது குழந்தைகளோடு வந்தால் அவர்களிடன் எடுத்துக் கூறுங்கள் , அவர்கள் தெரியாமல் கூட வந்திருக்கலாம், எல்லாரும் கேட்கவில்லை என்றாலும் ஒரு சிலராவது கேட்பார்கள்!, இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்கள்! அதனை ஞாபகம் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்! நன்றி!.

No comments: